கடலூர்

தாய், மகனைத் தாக்கி நகை பறிப்பு

DIN

ஸ்ரீமுஷ்ணம் அருகே தாய் , மகனை கட்டையால் தாக்கி, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள குணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த விருத்தகிரி மனைவி பிரேமா (54). இவரது மகன் சக்திவேல்.

இருவரும் வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் இரண்டு போ் வீட்டின் முன்பக்க கதவை தட்டினா். அப்போது, சக்திவேல் கதவைத் திறந்தபோது, அவரையும் சத்தம் கேட்டு பிரேமாவையும் மா்ம நபா்கள் தாக்கினா். இதன்பின்னா், பிரேமா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை இருவரும் பறித்து சென்றனா்.

புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT