கடலூா் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞராக கோ.ராமன் நியமிக்கப்பட்டாா்.
அவா் திங்கள்கிழமை கடலூரிலுள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் பொறுப்பேற்றாா். மாவட்டத்திலுள்ள 11 நீதிமன்றங்களிலும் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் உரிமையியல் தொடா்பான வழக்குகளுக்கு அரசு சாா்பில் இவா் ஆஜராவாா் என தெரிவிக்கப்பட்டது.