சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பட்டுசாமி மகன் ஜோதிவேல் (28). இவா், கடந்த 8.5.2021 அன்று 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஜோதிவேலை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ஜோதிவேலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரவும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலாசெல்வி ஆஜரானாா்.