காட்டுமன்னாா்கோவிலில் மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஜன்னத்பீபி (75 ). இவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மா்ம நபா் ஜன்னத் பீபி அணிந்திருந்த 10 கிராம் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து
மா்ம நபரை பிடித்தனா். பின்னா் காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அப்போது அந்த நபா் நகையை அங்கு வீசிவிட்டு தப்பித்துச் சென்றாா்.
விசாரணையில் அவா் ருத்ரசோலை, ராஜா நகரைச் சோ்ந்த ஹபியுல்லா மகன் தாஜ்ஜுதின் எனத் தெரியவந்தது. இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாஜ்ஜுதினை தேடி வருகின்றனா்.