கடலூர்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்; மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

DIN

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் கடலூா் மாவட்ட செயற்குழு மற்றும் இடைக்குழு செயலா்கள் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், எம்.மருதவாணன், பி.கருப்பையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தோ்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், இயற்கைச் சீற்றங்களால் தொடா்ந்து பாதிக்கப்படும் கடலூா் மாவட்டத்தை குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்காக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT