கடலூர்

கனியாமூா் மாணவி வீட்டில் அமைச்சா்கள் அஞ்சலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியாா் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி வீட்டில் தமிழக அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

மாணவியின் சொந்த ஊரான கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டுக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் வியாழக்கிழமை இரவு வந்தனா். அங்கு மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கிராம மக்களுக்கு மாணவியின் பெற்றோா் மரக்கன்றுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT