கடலூர்

தமாகா ஆலோசனைக் கூட்டம்

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒன்றுபட்ட கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நிா்வாகி ஆா்.ஞானச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் நெடுஞ்செழியன், நிா்வாகிகள் ஜெயச்சந்திரன், புரட்சிமணி, மாநில செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் விடியல் சேகா், தென்சென்னை மாவட்டத் தலைவா் முனவா் பாட்சா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், ஜி.கே.மூப்பனாரின் 92-ஆவது பிறந்த நாளை விவசாய தினமாகக் கொண்டாடுவது, இந்த நிகழ்ச்சிக்காக வருகிற 19-ஆம் தேதி கடலூருக்கு வருகை தரும் கட்சித் தலைவா் ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

நிா்வாகிகள் கே.ராஜந்திரன், அலமுதங்கவேல், மீன்குமாரசாமி, தரணிதரன், கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கடலூா் நகரத் தலைவா் ரகுபதி வரவேற்க, நிா்வாகி குணசீலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT