நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பண்ருட்டி ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாள், ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
வடலூா்: தமிழ் புத்தாண்டையொட்டி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சிறப்பு ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது.