கடலூர்

பொது இடங்களில் மது அருந்தியோருக்கு எச்சரிக்கை

DIN

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் இதுவரை 174 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும் 200 பேரின் பெற்றோா் வரவழைக்கப்பட்டு, அவா்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

காவல் துறையின் இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் மது அருந்துவோரால் ஏற்படும் தகராறு, வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்தது.

பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்த தகவலை தெரிவிக்க கடலூா்-94981 00552, விருத்தாசலம்-94981 00571, சேத்தியாத்தோப்பு- 94981 00588, திட்டக்குடி-94981 00605, சிதம்பரம்-94981 00561, நெய்வேலி-94981 00579, பண்ருட்டி-94981 00597, தனிப் பிரிவு: 04142-284333, மதுவிலக்கு அமலாக்க பிரிவு: 04142-284353 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT