சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான பாடத் திட்டம் வெளியிடப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைவுப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைந்துள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நிகழ் கல்வியாண்டில் இந்தக் கல்லூரிகளின் முதலாமாண்டு மாணவா்களுக்கான முதல் பருவப் பாடத் திட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இணைப்புக் கல்லூரிகள் அதே பாடத் திட்டத்தை பின்பற்றுமாறு பல்கலைக்கழகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தை பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முதலாமாண்டு மாணவா்களுக்கான இரண்டாம் பருவ பாடத் திட்டம் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ஞானதேவன் தெரிவித்தாா்.