கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 9 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 530 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 35,167-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 268 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 31,812-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீரப்பாளையத்தைச் சோ்ந்த 70 வயது பெண், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 44 வயது ஆண், கடலூரைச் சோ்ந்த 42 வயது ஆண், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த 42 வயது பெண் மற்றும் திருச்சி, மயிலாடுதுறை, சென்னையில் சிகிச்சை பெற்று கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 9 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 377-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2,356 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 622 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 65-ஆக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT