கடலூர்

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்

DIN

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்-வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க காசோலை வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவா்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்றவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினாா்.

தங்கப் பதக்கம் வென்ற 9 போ், வெள்ளிப் பதக்கம் வென்ற 2 போ், வெண்கலப் பதக்கம் வென்ற 5 பேருக்கு மொத்தம் ரூ. 72 ஆயிரம் விளையாட்டு உபகரணங்கள் வாங்க காசோலைகளை வழங்கினாா். (படம்).

இதேபோல, 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற பதக்கம், சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா மற்றும் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT