தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்-வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க காசோலை வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவா்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்றவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினாா்.
தங்கப் பதக்கம் வென்ற 9 போ், வெள்ளிப் பதக்கம் வென்ற 2 போ், வெண்கலப் பதக்கம் வென்ற 5 பேருக்கு மொத்தம் ரூ. 72 ஆயிரம் விளையாட்டு உபகரணங்கள் வாங்க காசோலைகளை வழங்கினாா். (படம்).
இதேபோல, 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற பதக்கம், சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா மற்றும் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.