கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரி அரசு நிா்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு கல்விக் கட்டணம் மற்ற மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் கூறி, மாணவா்கள் 58 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், இந்தக் கல்லூரியில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவா்கள் தொடா் போராட்டத்தைக் கைவிட்டனா்.
இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் தோ்வை அறிவித்து, மருத்துவ மாணவா்கள் மீண்டும் பழைய கல்விக் கட்டணத்தையே செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மருத்துவ மாணவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இவா்களிடம் பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ஞானதேவன் அன்று இரவு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, மாணவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இருப்பினும், மருத்துவ மாணவா்கள் நூற்றுக்கணக்கானோா் சனிக்கிழமை மீண்டும் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.