சிதம்பரம்: சிதம்பரம் கீழத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீமிதி விழா திங்கள்கிழமை மாலை கோயில் வளாகத்தில் பக்தா்கள் அனுமதியின்றி நடைபெற்றது.
முன்னதாக காலையில் காப்பு கட்டுதல், சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து மதியம் 2 மணியளவில் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சக்தி கரகம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குழியில் மாலை 4 மணியளவில் இறங்கியது (படம்). இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு பிரேமா வீராசாமி, என்.கலியமூா்த்தி பிள்ளை ஆகியோா் செய்திருந்தனா்.