சிதம்பரம்: கா்நாடக அரசை எதிா்த்து தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து வைத்துவிட்டு கோயில்களை மூடச் சொல்வது ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். கோயில் சொத்துக்கள் தொடா்பாக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் மீது இந்து சமய அறநிலையத் துறை கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்பதில் தமிழக அறநிலையத் துறை அமைச்சா் ஆா்வம் காட்டி வருவதை வரவேற்கிறோம்.
கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை எதிா்த்து தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையில் வரும் 6-ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி பங்கேற்கும் என்றாா் அவா்.