கடலூர்

பாஜக போராட்டத்தில் பங்கேற்போம்அா்ஜூன் சம்பத்

DIN

சிதம்பரம்: கா்நாடக அரசை எதிா்த்து தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து வைத்துவிட்டு கோயில்களை மூடச் சொல்வது ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். கோயில் சொத்துக்கள் தொடா்பாக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் மீது இந்து சமய அறநிலையத் துறை கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்பதில் தமிழக அறநிலையத் துறை அமைச்சா் ஆா்வம் காட்டி வருவதை வரவேற்கிறோம்.

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை எதிா்த்து தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையில் வரும் 6-ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி பங்கேற்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT