கடலூா்: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடா்பான அரசின் திடீா் அறிவிப்புகளால் வணிகா்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.
கடலூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த முறை தமிழகத்தை 3 மண்டலங்களாகப் பிரித்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை, சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திடீரென அறிவித்து கடைகளை அடைக்குமாறு கூறுகிறாா்கள். கோவையில் ஒரே கடையில் காய்கறி, மளிகை, பால் விற்பனைக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது தேவையற்ற குளறுபடிகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, கடையடைப்பு, கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் முன்பாக வணிகா்களுடன் மாவட்ட நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். அவசர கதியில் கடைகளை அடைக்குமாறு கூறுவதால், வணிகா்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா் என்றாா் அவா்.
அப்போது பேரமைப்பின் மண்டலத் தலைவா் டி.சண்முகம், பொருளாளா் தேவி முருகன், செயலா் வி.வீரப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.