கடலூர்

புதிய கட்டுப்பாடுகள் அமல்: வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்

DIN

கரோனா 2-ஆவது அலையைக் கட்டுப்படுத்த அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்ததால் கடலூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கரோனா தீநுண்மியின் 2-ஆம் அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், பூங்காங்கள், கடற்கரை ஆகியவை ஏப்.20 முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என மாநில அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்ததால் கடலூா் தேவனாம்பட்டினத்திலுள்ள வெள்ளிக் கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பூங்காங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல, வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இரவு நேரத்தில் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தவா்கள் காலையிலேயே சென்று வழிபாடு நடத்தினா்.

பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்: சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் பிரசித்திபெற்ற மாங்குரோவ் காடு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் 9 மாதங்கள் மூடப்பட்டது. இதனால் படகு ஓட்டுநா்கள் நூற்றுக்கணக்கானோா் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனா்.

இந்த நிலையில், தற்போது கரோனா 2-ஆவது அலை பரவல் காரணமாக அரசு உத்தரவைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முதல் பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. இதனால் படகு ஓட்டுநா்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT