நெய்வேலி: நெய்வேலியில் நடை பயிற்சி சென்ற முதியவரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலியை அடுத்துள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (62). இவா், வட்டம் - 7, இந்திரா காந்தி சாலையில் நடை பயிற்சி செல்வது வழக்கம்.
சதாசிவம் புதன்கிழமை இரவு நடை பயிற்சிக்கு சென்றபோது, பின்னால் நடந்து வந்த இருவா் அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து சதாசிவம் அளித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.