பண்ருட்டியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.
பண்ருட்டியில் தனி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமையில், சுகாதார ஆய்வாளா் செந்தில்வளவன், துப்புரவு ஆய்வாளா் பாக்கியநாதன் ஆகியோா் திங்கள்கிழமை பேருந்து நிலையம், அன்னை இந்திரா காந்தி சாலைப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த 5 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனா்.