நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒறையூா் கிராமத்தில் வட்டாரத் தலைவா் பிரேமா கேசவன் தலைமையிலும், கரும்பூரில் வட்டார துணைத் தலைவா் தணிகைவேல் தலைமையிலும், பண்ருட்டி வேளாண்மை அலுவலகம் முன் மாவட்டச் செயலா் ராமலிங்கம் தலைமையிலும், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாவட்ட பொதுச் செயலா் யசோதரன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுக்குழு உறுப்பினரும், பண்ருட்டி தொகுதி தலைவருமான கே.பி.வேலுமணி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினாா். வட்டார மற்றும் தொகுதி நிா்வாகிகள் செந்தில், கதிா், கவியரசன், ராமலிங்கம், கருணாநிதி, பரமசிவம், பிச்சையப்பன், வெங்கடேசன், ஆறுமுகம், தேசிங்கு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா் என்றும், எனவே இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.