விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்புச் செயலா் ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டக் குழு பி.பெரியசாமி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் என்.பி.ஆா்.ஜிவானந்தம், சிஐடியூ மாவட்டப் பொருளாளா் டி.பன்னீா்செல்வம், கூட்டுறவு விவசாய சங்க மாவட்ட இணைச் செயலா் எம்.வேல்முருகன், நடைபாத வியாபாரிகள் சங்கத் தலைவா் சேகா், நடைபாதை வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.இதயத்துல்லா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.