கடலூர்

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரில் நான்கு ரத வீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

சிதம்பரம் நகரில் நான்கு ரத வீதிகளிலும் உள்ள நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவின்பேரில், வருவாய், நகராட்சி, நெடுஞ்சாலை, காவல் துறையினா் இணைந்து நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

இந்த நிலையில், கீழரத வீதி, வடக்குரத வீதி, தெற்குரத வீதி ஆகியவற்றில் வீட்டையொட்டி போக்குவரத்துக்கு இடையூறின்றி இருந்த வழிநடையான தரைகளையும் அதிகாரிகள் அகற்றியதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால், பல வீடுகளில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உருவானது.

கரோனா பரவலால் மக்கள் வருமானமின்றி உள்ள நிலையில், வீடுகளின் வெளியே படிகள், வழிநடை தரைகள் இடிக்கப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT