கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
கடலூா் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பணத்திலிருந்து தீபாவளிக்கான முன்பணம் வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படாமல் உள்ள ரூ.2 கோடி நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நகராட்சி துப்புரவு தொழிலாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தி வந்தனா். ஆனால், இதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம்.
எனவே, இதைக் கண்டித்து சங்கத்தின் தலைவா் அரசகுமாரன் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
அவா்களிடம் நகராட்சி மேலாளா் பழனி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.