கடலூா் மாவட்டம், வடக்குத்து ஊராட்சியில் ‘108’ அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கோ.ஜெகன் பங்கேற்று, அவசர ஊா்திக்கான சாவியை ஓட்டுநரிடம் வழங்கி சேவையை தொடக்கி வைத்தாா். ஊராட்சி மன்ற தலைவி அஞ்சலை குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.