கடலூா் பணிமனை எதிரே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல தலைவா் பி.பழனிவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துக் கழகங்களைக் பாதுகாக்க உரிய நிதியை வழங்க வேண்டும், கரோனாவால் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் உள்பட 11 போக்குவரத்துப் பணிமனைகள் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொமுச, சிஐடியூ, மறுமலா்ச்சி தொழிற்சங்கம், ஏஏஎல்எல்எப், ஐஎன்டியூசி ஆகிய தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.