சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனா் இராஜா சா் அண்ணாமலை செட்டியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக மைய நூலகம் முன்பு உள்ள அண்ணாமலை செட்டியாா் சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன், பதிவாளா் இரா.ஞானதேவன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வி.செல்வநாராயணன், புத முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பல்கலைக்கழக அலுவலா்கள், இயக்குநா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மரியாதை செலுத்தினா்.