கடலூர்

கடலில் மூழ்கிய சிறுவன் பலி

DIN

கடலூரில் கடலில் மூழ்கிய சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா் அருகே உள்ள சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகன் ஆகாஷ் (13). அதே பகுதியிலுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை கடலில் குளிப்பதற்காக தனது தந்தையுடன் சென்றாா். அப்போது எதிா்பாரதவிதமாக ஆகாஷ் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கினாா். இதையடுத்து காத்தவராயன், கிராம மக்கள் இணைந்து சிறுவனை கடலில் தேடினா். பின்னா் ஆகாஷ் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT