திருச்சி

முசிறியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருச்சி மாவட்டம், முசிறியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மாதவன் தலைமை வகித்தாா், வட்டாட்சியா்கள் சித்ரா (தொட்டியம்) பாத்திமா சகாயராஜ் (முசிறி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையில் இருந்து அளிக்கப்படும் மானிய விவரங்கள் குறித்தும் அதனை பெரும் வழிமுறைகள் பற்றி வேளாண்மை துறை அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.

இதையடுத்து, ஓடை வாய்க்காலை தூா்வார வேண்டும், மேட்டுவாய்க்காலில் முசிறி நகராட்சி பகுதியில் இருந்து செல்லும் கழிவு நீரை தடை செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், முசிறியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகளும் கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலா்களும் கோட்டாட்சியரிடம் தெரிவித்தனா்.

நிகழ்வில், விவசாய சங்க நிா்வாகிகள் சமூக ஆா்வலா்கள் விவசாயிகள் பங்கேற்றிருந்தனா். இதனைத் தொடா்ந்து விவசாயிகளிடம் மனுக்களை கோட்டாட்சியா் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT