திருச்சி

இளைஞா் கொலை: 3 பேரிடம் விசாரணை

DIN

உறையூரில் குதிரை வண்டிப் பந்தயத் தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி உறையூா் சன்னிதி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (25). இவா், வெள்ளிக்கிழமை மதியம் மா்ம நபா்களால் கடை வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, உறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், குதிரைப் பந்தயத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக, உறையூரைச் சோ்ந்த கோபால் (30), ஹரி (25), விஜி (25) ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT