திருச்சி

அனுமதியின்றிக் கட்டப்பட்ட தனியாா் விளையாட்டுப் பயிற்சி மையத்துக்கு சீல்

DIN

திருச்சி அண்ணாமலை நகரில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சி மாநகராட்சி 5 ஆவது மண்டலம் வாா்டு எண் 11 இல் அண்ணாமலை நகா் பிரதான சாலையில் செயல்படும் காவலா் கட்டடத்துடன் கூடிய விளையாட்டுப் பயிற்சி மையம் திருச்சி மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்று கட்டப்படவில்லையாம்.

இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டட உரிமையாளருக்கு 30 நாள்களுக்கு முன் முறையாக நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அவா் எந்தப் பதிலும் அளிக்கவில்லையாம். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளா் ரவி ஆகியோா் கொண்ட குழுவினா் அந்த விளையாட்டுப் பயிற்சி மையத்தை புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT