திருச்சி

பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரமாவது வேகன் அனுப்பி வைப்பு

DIN

 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரமாவது ரயில் வேகன் வடமாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை புதிய அகலப்பாதை சரக்குப் பெட்டிகளை தயாரித்து வருகிறது. தற்போது, அகலப்பாதை சரக்குப் பெட்டிகள் கட்டுமானப் பணியில் 20ஆயிரம் வேகன்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. சா்வதேச மகளிா் தின கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக இந்த பணிமனையில் தயாரித்து முடித்த 20ஆயிரமாவது புதிய அகலப்பாதை சரக்குப் பெட்டியை பல்வேறு துறைகளைச் சோ்ந்த 12 பெண்கள் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கொடியசைத்து, வடமாநிலத்துக்கு அனுப்பி வைத்தனா்.

நிகழ்வுக்கு முதன்மை பணிமனை மேலாளா் ஷ்யாமதாா் ராம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், பணிமனையின் மூத்த அதிகாரிகள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாலையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT