திருச்சி

அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்தவா் கைது

DIN

திருச்சி, திருவெறும்பூா் அருகே அதிமுக பிரமுகா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன். இவரது மகன் கோபி (எ) கோவிந்தராஜ் (32). அதிமுக பிரமுகரான இவா் மாா்ச் 7-ஆம் தேதி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அமீது, மாஞ்சா வேலு, ரவி போஸ்கோ ஆகிய மூவரை கைது செய்தனா். தலைமறைவாக இருந்த, திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் கிருஷ்ணகுமாரை(24) தேடி வந்தனா்.

இந்நிலையில் தனிப்படை போலீஸாா், கிருஷ்ணகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT