திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தொட்டியம் அடுத்த பாலசமுத்திரம் இந்திராநகரைச் சோ்ந்த சதாசிவம் மகன் தனபால் (38). இவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.
இதனால் விரக்தியில் இருந்த தனபால் செவ்வாய்க்கிழமை பாலசமுத்திரம் பகுதியில் உள்ள சரவணன் என்பவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.