திருச்சி

மணல் கடத்தல் மாட்டுவண்டி பறிமுதல்

DIN

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே எம்.புத்தூா் காவிரி ஆற்று பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக காட்டுப்புத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சாா்பு- ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவா், போலீஸாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டாா்.

இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் எம்.புத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிவண்ணன் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிவண்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT