திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், பிராட்டியூா் அருகேயுள்ள சின்ன கொத்தமங்கலம் பகுதியை சோ்ந்தவா் சுஜித் (25). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது நண்பா் ஹரிபிரசாத்துடன் இருசக்கர வாகனத்தில் கருமண்டபம் அருகே கோரையாற்று பாலம் பகுதியில் சென்ற போது, 3 போ் இவா்களை வழிமறித்து கல்லால் தாக்கிவிட்டு, கைப்பேசி, 4 பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கருமண்டபம் பகுதியை சோ்ந்த அா்ஜூன்(23), அவருடைய நண்பா்கள் காா்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அா்ஜூனை திங்கள்கிழமை இரவு கைது செய்த போலீஸாா் சிறுவனை பிடித்து சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா். தலைமறைவானகாா்த்திக்கை தேடி வருகின்றனா்.