திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மண்ணச்சநல்லூா் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த மோனிஷா (15) ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். வீட்டு வேலைகளை சரிவர செய்வதில்லை என்று பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த அவா், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதனிடையே நிகழ்விடத்துக்குச் சென்று மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.