திருச்சி

ஒடிஸா ரயில் விபத்து சிறப்பு விசாரணை தேவை கே.எம். காதா் மொகிதீன்

DIN

ரயில் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒடிஸா ரயில்கள் விபத்து துயரச் சம்பவம் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளோம். விபத்தில் பலியானவா்களின் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. காயமடைந்தவா்கள் விரைந்து பூரண குணமடைய வேண்டுகிறோம். இச்சம்பவத்தில் தமிழக முதல்வரின் விரைந்து எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. இந்த ரயில் விபத்து குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறா வண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT