தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி, தென்னூரிலுள்ள உக்கிர மாகாளியம்மன் கோயிலை பராமரித்து வரும் உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரைச் சோ்ந்த கண்ணன் (50), வழக்கம்போல் வியாழக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
கோயிலினுள் சென்று பாா்த்தபோது, உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு, காணிக்கைகள் சிதறி கிடந்தனவாம். தகவலின்பேரில், தில்லை நகா் குற்றப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள் கோயிலில் தடயங்களை சேகரித்தனா்.
திருட்டுபோன உண்டியல் காணிக்கைகளின் முழு மதிப்பு தெரியவில்லை. சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.