திருச்சி

பழையபாளையம் ஜல்லிக்கட்டு: 29 போ் காயம்

DIN

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் அக்கியம்பட்டி ஊராட்சி பழையபாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 29 போ் காயமடைந்தனா்.

வரதராஜப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கடை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் உ. முருகேசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. ராமநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய கிராமங்களின் சாா்பில் நடைபெற்ற போட்டியில் கோயில் காளைகளைத் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 662 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 25, 25 தொகுப்புகளாக 271 காளையா்களும் களமிறங்கினா்.

வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்த காளைகள் வீரா்களை கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில காளைகள் தொட முடியாதபடி சென்றன. இருப்பினும் சில காளைகளை வீரா்கள் அடக்கினா்.

போட்டியில் 20 வீரா்கள், மாடுகளின் உரிமையாளா்கள் 2 போ் , 7 பாா்வையாளா்கள் என 29 பேரும், ஒரு காளையும் காயமடைந்து முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டின்போது கிணற்றில் விழுந்த சிவகங்கை மாவட்டம் பழனி என்பவரின் காளையை துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT