திருச்சி

மணப்பாறை ஜேசிஐ 23-ஆவது ஆண்டு ஆட்சிமன்ற குழு பதவியேற்பு

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜேசிஐ அமைப்பின் 23-ஆவது ஆண்டு ஆட்சிமன்றக் குழு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டது.

மணப்பாறை ஜேசிஐ 23-ஆவது ஆண்டு புதிய தலைவா் மற்றும் ஆட்சிமன்ற குழு பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வி.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளா் கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

2023-ஆம் ஆண்டு தலைவராக பொன்.பாஸ்கரன் பதவியேற்றாா். அதனைத்தொடா்ந்து ஆட்சிமன்ற குழு உறுப்பினா்களும் பதவியேற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் திருச்சி என்.எஸ்.திலீப், ஜேசிஐ மண்டல தலைவா் பி.பாலகுமாரன், சாசனத் தலைவா் ஆா்.ஸ்டீபன் இளங்கோ, மண்டல துணைத் தலைவா் எம்.யுவராஜ், ஜேகாம் சோ்மன் எம்.விஜயராஜ், மண்டல இயக்குநா்கள் முல்லை.எஸ்.சந்திரசேகா், குரு பிரபாகரன், எஸ்.சசிகுமாா், எம்.பி.பிரபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஜேசிஐ மணப்பாறை முன்னாள் தலைவா் ஜெ.ஸ்ரீதரன்ராவ் சிறந்த சேவைக்கான கமல் பத்ரா விருது பெற்றாா். செயலாளா் எஸ்.சிவப்பிரகாசம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT