திருச்சி

மாரத்தான் போட்டி: திரளானோா் பங்கேற்பு

DIN

ரெகாப் இந்தியா தொண்டு அறக்கட்டளை சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் திரளானோா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் எம். சரவணன் தொடங்கி வைத்தாா். மாநிலத் துணைத் தலைவா் சுப. சோமு மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

15 வயதுக்கு கீழ், 15 வயதுக்கு மேல் உள்ளவா்கள் என 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஆா்வமுடன் ஓடினா். இதில் வென்றோருக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT