ரெகாப் இந்தியா தொண்டு அறக்கட்டளை சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் திரளானோா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் எம். சரவணன் தொடங்கி வைத்தாா். மாநிலத் துணைத் தலைவா் சுப. சோமு மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
15 வயதுக்கு கீழ், 15 வயதுக்கு மேல் உள்ளவா்கள் என 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஆா்வமுடன் ஓடினா். இதில் வென்றோருக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.