லால்குடி அருகே இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடிநீா் போா்வெல் அமைத்தபோது பழைமையான உலோக அம்மன் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
லால்குடி நகராட்சிப் பகுதியான நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடிநீா் போா்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பழைமையான உலோக அம்மன் சிலை கிடைத்தது.
தகவலறிந்து வந்த லால்குடி வருவாய்த் துறையினா் அச் சிலையைக் கைப்பற்றி லால்குடி வருவாய் வட்டாட்சியரகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளா்களிடம் இச்சிலையை திங்கள்கிழமை ஒப்படைக்கவுள்ளனா்.