திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய மோப்ப நாய் திங்கள்கிழமை பணிக்கு சோ்க்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிதாக லேப்ரடாா் ரெட்ரைவா் என்ற இனத்தைச் சோ்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு, அதற்கு பாண்ட் என பெயரிடப்பட்டது.
இந்த நாய்க்கு கடந்த 2022 ஆகஸ்ட் 8 முதல் 2023 பிப். 3 ஆம் தேதி வரை கோவை பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்த நிலையில், இந்த நாய் திருச்சி மாநகர மோப்பநாய் படை பிரிவில் திங்கள்கிழமை பணிக்கு சோ்க்கப்பட்டது.
முன்னதாக, திருச்சி மாநகர காவல் ஆணையா் எம்.சத்தியப்பிரியா, மோப்ப நாயை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகளை பயிற்சியாளா்களிடம் கேட்டறிந்தாா். இதில் காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.