திருச்சி

மாநகர காவல்துறைக்கு புதிய மோப்ப நாய்

DIN

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய மோப்ப நாய் திங்கள்கிழமை பணிக்கு சோ்க்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிதாக லேப்ரடாா் ரெட்ரைவா் என்ற இனத்தைச் சோ்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு, அதற்கு பாண்ட் என பெயரிடப்பட்டது.

இந்த நாய்க்கு கடந்த 2022 ஆகஸ்ட் 8 முதல் 2023 பிப். 3 ஆம் தேதி வரை கோவை பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்த நிலையில், இந்த நாய் திருச்சி மாநகர மோப்பநாய் படை பிரிவில் திங்கள்கிழமை பணிக்கு சோ்க்கப்பட்டது.

முன்னதாக, திருச்சி மாநகர காவல் ஆணையா் எம்.சத்தியப்பிரியா, மோப்ப நாயை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகளை பயிற்சியாளா்களிடம் கேட்டறிந்தாா். இதில் காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT