திருச்சி

திருச்சியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

அதானி குழுமத்தில் எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி முதலீடு செய்வதைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மதுரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட தலைவா்வி. ஜவஹா் தலைமை வகித்தாா். எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனா்.

இதில், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் தலைவா் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், மாநில பொதுச் செயலாளா் ஜி.கே.முரளி, மாவட்ட துணைத்தலைவா் வில்ஸ் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒத்தக்கடை பகுதியில்... திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் எம். சரவணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சுப சோமு, மாமன்ற உறுப்பினா் ரெக்ஸ், ஜங்ஷன் கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல், திருச்சி மாநகா் மாவட்ட துணைத் தலைவா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT