திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு பள்ளி மாணவி சுகிதா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை சனிக்கிழமை வழங்கினாா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன் மகள் சுகிதா. 9ஆம் வகுப்பு மாணவியான சுகிதா, தனது சேமிப்புத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நண்பா்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு சனிக்கிழமை சிறை மேலாளா் திருமுருகனிடம் வழங்கினாா்.
சிலம்பம் தற்காப்பு கலையில் சா்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்ற அவா், இலவசமாக சிலம்பப் பயிற்சிகளை அளித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.