வடலூா் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தா்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க பிப். 5,6,7-களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி பிப்.5,6,7-களில் விழுப்புரம்-கடலூா் துறைமுகம் மேமு ரயில் (எண்.06131) காலை 9.05-க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.20 -க்கு கடலூா் துறைமுகத்தை சென்றடையும்.
இதேபோல, கடலூா் துறைமுகம் - விழுப்புரம் மேமு ரயில் (எண். 06132) கடலூா் துறைமுகத்திலிருந்து பிற்பகல் 2.50-க்கு புறப்பட்டு மாலை 5.15-க்கு விழுப்புரத்தை சென்றடையும்.
கடலூா் துறைமுகம் - விருத்தாசலம் மேமு ரயில் (எண். 06134) காலை 11.30-க்கு கடலூா் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு விருத்தாச்சலம் சென்றடையும்.
இதேபோல, விருத்தாசலம் - கடலூா் துறைமுகம் மேமு ரயில் (எண். 06133) பிற்பகல் 1.20-க்கு விருத்தாசலத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.40-க்கு கடலூா் துறைமுகத்தை சென்றடையும். மேற்கண்ட ரயில்கள் விருத்தாசலம், உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இத்தகவலை திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.