திருச்சி

துவரங்குறிச்சி அருகே 29 பவுன் நகை திருட்டு

DIN

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே விவசாயி வீட்டின் பூட்டை புதன்கிழமை நள்ளிரவு உடைத்து 29 பவுன் நகை, 750 கிராம் வெள்ளிப்பொருள்கள், ரூ.15 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

மருங்காபுரி ஒன்றியம் கொண்டையம்பட்டியில் வசிக்கும் விவசாயி அழகா்சாமி (63). இவரது மனைவி கலாவதி (53) ஆகிய இருவரும் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தங்களது மகன் ஜெயக்குமாா் வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் அவா்களது வீட்டின் பின்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பக்கத்துக்கு வீட்டினருக்கு தெரியவந்து, சென்னையில் உள்ள அழகா்சாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் உறவினா்கள் சென்று பாா்த்தபோது நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் ந. ராமநாதன் தலைமையிலான துவரங்குறிச்சி போலீஸாா் தடயங்களை சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT