திருச்சி

திதி கொடுக்க வந்தவா் காவிரியில் மூழ்கி பலி

DIN

பாட்டிக்கு திதி கொடுக்க வந்தவா் ஆற்றில் மூழ்கி இறந்தாா்.

திருச்சி தில்லைநகா் பகுதி காந்திபுரத்தில் வசிப்பவா் சண்முகவேல் மகன் ராஜேஷ்வரன் (27). இவரது பாட்டிக்கு திதி கொடுக்க புதன்கிழமை காலை அம்மா மண்டபம் காவிரியாற்றில் ராஜேஷ்வரன் உள்ளிட்ட குடும்பத்தினா் வந்தனா். அப்போது ராஜேஷ்வரன் மட்டும் காவிரியில் குளித்து கொண்டிருந்தாா். சண்முகவேலும் மற்றவா்களும் திதி கொடுத்து விட்டு ராஜேஷ்வரனை பாா்த்தபோது அவரைக் காணவில்லை. இதுகுறித்து அவா்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை காவிரியாற்றில் ராஜேஷ்வரன் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தெரிவித்தனா். ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனா். அவா் காக்காவலிப்பு ஏற்பட்டு ஆற்றுக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் எனத் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT