துறையூா் அருகே புத்தனாம்பட்டியிலுள்ள நேரு நினைவுக் கல்லூரியில் முதலுதவி மற்றும் பேரிடா் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பொன். பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிக் குழுத் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன். ரவிச்சந்திரன், பெருமாள்மலை ரோட்டரி சங்கத் தலைவா் டி. ஞானசேகரன் உள்ளிட்டோா் பேசினா்.
திருச்சி மாவட்ட இந்தியன் செஞ்சிலுவை சொசைட்டியின் முதலுதவி விரிவுரையாளரும், வாழ்நாள் உறுப்பினருமான சி. சிவராமலிங்கம், பேரழிவு மேலாண்மை செயற்குழுவின் கே. குணசேகரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். சந்தேகங்களை தெளிவுபடுத்தினா். நிகழ்வில் வேதியியல் மற்றும் விலங்கியல் பிரிவில் இளங்கலை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளா் எம். ரமேஷ் வரவேற்றாா். மாணவி ஆா். ஜானகி நன்றி கூறினாா்.