திருச்சி

கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், கோபுரப்பட்டி அருள்மிகு ஆதிநாயகப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஆதிநாயகப் பெருமாள் காட்சியளித்தாா்.

இரவு ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய பின்னா், ஆதிநாயகப் பெருமாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மண்ணச்சநல்லூா் மேலஅக்ரஹாரத்திலுள்ள பாலஆஞ்சனேயா் கோயில் மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பாலஆஞ்சனேயருக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT